We created a GatheringUs memorial to celebrate the life of Alagappa Ram Mohan. Collecting your stories and memories here will offer us great comfort. As we plan gatherings, we will post invites. Remember to RSVP to help us plan. Thank you for contributing to this lasting memorial. இந்த... see moreWe created a GatheringUs memorial to celebrate the life of Alagappa Ram Mohan. Collecting your stories and memories here will offer us great comfort. As we plan gatherings, we will post invites. Remember to RSVP to help us plan. Thank you for contributing to this lasting memorial. இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நூலான தமிழ் மறை திருக்குறள் நூல் வெளியீட்டு விழா மேதகு அப்துல் கலாம் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. மேதகு அப்துல் கலாம் அவர்களின் அக்னிச்சிறகுள் நூல் வெளியான சில மாதங்களில் சென்னை ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் அப்துல் கலாம் அவர்களை வாசகர்களைச் சந்தித்த நாளில் தான் தமிழ் மறை திருக்குறள் நூல வெளியிடப்பட்டதால் அது 2000 என்பது நினைவிருக்கிறது. நீண்ட இடைவெளியால் அவ்விழா அழைப்பிதழ் இப்போது என் கைவசமிலலை அவ்விழா குறித்த தினமணியின் மிக அற்புதமான மூன்று நாள் தொடர் செய்திகளின் பதிவுகளும் கூட கைவசமில்லை. தேதியும் நினைவில்லை. அது விநோதமாக மதியம் 2.00 மணியளவில் நடத்தப்பட்டதால் அந்த நேரம் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. மதியம் 2.00 மணிக்கு இலக்கிய விழாவா? ஒரு இலக்கிய விழாவை கொளுத்தும் வெயில் நேரத்தில் நடத்தினால் யார் வருவார்கள்? எனப் பலரும் புருவங்களை உயர்த்தினார்கள். யார் வந்தாலும் வராவிட்டாலும், அந்த விழாவிற்கு போக வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்தது. தினமணி நாளிதழும் எங்கள் புத்தகக் கடையின் திருக்குறள்.ஆர்வமிக்க மூன்று வாசகர்களும் தான் அந்தக் கடப்பாட்டிற்கு காரணமானவர்கள். இந்தத் திருக்குறள் விழாவைப் பற்றி அதற்கு முந்தைய மூன்று நாட்கள் தினமணி மிகச் சிறப்பான அறிமுகத்தையும் முன்னோட்டத்தையும் தொடர்ந்து வழங்கியது. அந்த விழாவிற்குள் பல நிகழ்ச்சிகள் அவற்றுள் முக்கியமானது தமிழ் மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture எனும் நூல் வெளியீட்டு விழா என்பதையும் அந்த நூலின் சிறப்புகளையும் மிக மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட அந்த விழா பற்றிய முன்னோட்டத்தையும் மிகத் தெளிவாக வெளியிட்டது. அவை மூன்று நாட்கள் தொடராக வெளியிடப்பட்டதால் மிகப் பெரிய எதிர்பபார்ப்பையும் ஏற்படுத்தியது. தினமணியின் கட்டுரைகள் என்னை சுண்டி இழுத்தது. அந்த நூலைப் பற்றியும் விழாவைப் பற்றியும் பல வாசகர்களிடம் எடுத்துச் சொன்னேன். நூலின் விலை 600/- ஆனால் அந்த நூலின் தாள் அச்சமைப்பு போன்றவற்றிற்கே அதற்கு மேலும் கொடுக்கலாம். உள்ளடக்கம் மதிப்பிடவே முடியாதது. எனினும் அன்றைக்கு 600/- ரூபாய் என்பது சற்று அதிகமாகத் தெரிந்தது. அதனால் மூன்றே மூன்று வாசகர்கள் தான் என்னிடம் முன்பணம் தந்தார்கள். ஈடு இணையில்லாத அந்த தமிழ் மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture எனும் இருமொழி நூலை பைபிள் தாளி்ல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அற்புதமான நூலை பதிப்பித்தவரும் அந்த விழா நடத்தியவரும் மிக அண்மையில் (12.12.2019) நம்மை விட்டுப் பிரிந்த திருக்குறள் நெறியில் வாழந்த அழகப்பா ராம் மோகன் ஐயா தான். மீண்டும் நினைவூட்டுகிறேன். அது மதியம் 2.00 மணியளவில் தொடங்கும் விழா. தினமணியில் விழா முன்னோட்டத்தை படித்திருந்ததாலும் நான்கு புத்தகங்களுக்கு பதிவு செய்திருந்ததால், விழா நிர்வாகி ஒருவருடன் தொலைபேசியில் பேசியிருந்ததாலும் மற்ற விழாக்களைப் போல கூட்டம் சேர்ந்த பிறகு கூட்டத்தை ஆரம்பிப் போம் என்ற எண்ணத்திற்கு இடமளிக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் 1.50 மணியளவில் அரங்கிற்கு வந்து சேர்ந்தேன். இருந்தாலும் கூட்டமெல்லாம் கூடும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் விழா தொடங்குவதற்கு முன்னரே அரங்கம் ஏறத்தாழ முழுமையாக நிரம்பிவிட்டது. அதற்குக் காரணம் இந்த விழா அமைப்பாளர்கள் தமிழகமெங்கும் சுற்றி வந்து எல்லா திருக்குறள் அமைப்பினரை இனங்கண்டு அந்த விழா குறித்தும் நூல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த திருக்குறள் தொண்டர்களை அழைத்து தான். அது சாதாரணக் கூட்டம் அல்ல, ஆழ்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களைப் போன்றோரின் கூட்டம். அத்தகைய கூட்டம் மதியம் 2.00 மணியல்ல நடுநிசி 2.00 மணிக்கும் திருக்குறளிற்காகக் கூடும். அந்தக் கூட்டத்தில் வழக்கமான வரவேற்புரை தலைமையுரை நூல் வெளியீடு போன்றவற்றோடு நிறைவு பெற்றிடவில்லை. கூட்டு வழிபாடு தியானம் எல்லாம் நடந்தது. ஒவ்வொன்றும் நிகழ்ச்சி நிரலில் குறித்தபடி கடிகார இயக்கம் போல நிமிடக் கணக்கு பிசிறாமல் சீராக நிகழ்ந்தது. அந்தக் கூட்டம் சில படிப்பினைகளைத் தந்தது. ஒரு விழாவிற்கு பெருங் கூட்டம் கூட வேண்டுமெனில் மிகப் புகழ்பெற்ற பிரமுகர், உணர்ச்சிகரமாக அவை ஆளும் பேச்சாளர் போன்றரை வைத்து விழாவை நடத்த வேண்டுமென பொதுவாக நினைக்கிறோம். அதுவும் ஓரளவு சரியானது தான். ஆனால் ஒரு விழாவிற்கு நல்ல நோக்கம் இருக்க வேண்டும் அல்லது நல்ல நோக்கத்திற்காகத் தான் விழா எடுக்கப்பட வேண்டும் என்பது தான் இராம் மோகன் ஐயா அளித்த முதல் படிப்பினை. நோக்கம் எவ்வளவு சிறந்ததாயினும் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது பிடிப்பினை. இவற்றையெல்லாம் விட ஆகச் சிறந்த பிடிப்பினை விழாவிற்கு தகுதியானவர்களைத் தேடி அழைக்க வேண்டும் என்பதாகும். இராம் மோகன் ஐயா அவர்கள், உலகெங்குமுள்ள திருக்குறள் ஆர்வலர்களைப் படையாகத் திரட்டி பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தமிழ் மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture எனும் மிகச் சிறந்த தொகுப்பை உருவாக்கினார்கள். அந்த நூலின் வீச்சினால் ஐயா ஒரு மாபெரும் திருக்குறள் ஆர்வலர் என்ற குணநலத்திற்கும் அவர்களின் மற்ற பல குணநலங்களை நம் உணராமல் இருந்துவிடுகிறோம். திருக்குறளுக்கு அப்பாலும் தமிழ் மொழி, தமிழ் இனம், இனத்தின் முன்னேற்றம் என ஐயாவின் ஈடுபாடு கோபுரமாக உயர்கிறது. மாணவர் நலமும் முன்னேற்றமும் இவற்றுள் உட்கிளையாக உள்ளது. தமிழால் வளம் கூட்டுக என்பது உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் தாரக மந்திரம். நலந்தா செம்புலிங்கம்nalanthaa@gmail.com