The International Tamil Language Foundation with the motto ENRICH THROUGH TAMIL strives to develop and... moreThe International Tamil Language Foundation with the motto ENRICH THROUGH TAMIL strives to develop and maintain the traditions of Tamil language and culture in the United States and other nations. The Foundation is a tax-exempt, not for profit, service organization with members and supporters throughout the world.
We created a memorial to celebrate the life of Dr. Alagappa Rammohan. Collecting your stories and memories here will offer us great comfort.
Thank you for contributing to the memory of this beloved man.
OBITUARY
Dr. Alagappa Rammohan was never afraid of traveling the road less traveled. He came to the United States over 55 years ago and started a life and family with no one paving the way for him. He stands firm in his beliefs and principles no matter the circumstance. He has loved and admired the Tamil language forever. His not for profit organization, his development of the first Tamil school in our area, and his hand book on Tamil heritage... see moreDr. Alagappa Rammohan was never afraid of traveling the road less traveled. He came to the United States over 55 years ago and started a life and family with no one paving the way for him. He stands firm in his beliefs and principles no matter the circumstance. He has loved and admired the Tamil language forever. His not for profit organization, his development of the first Tamil school in our area, and his hand book on Tamil heritage and culture with the Thirukkural translation of the famous poet Thiruvalluvar’s 1330 Thirukkurral couplets are all continuous reminders of his dedication to leaving a meaningful impact. He has done and continues to do many noteworthy things in his life including starting his own company, traveling the world, getting a PhD in Physics later in life, and now building a library in his hometown. His window to the world is through his love of photography and the art of taking pictures. He truly lived up to Ghandi’s words, “Be the change you wish to see in the world.”
தமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றின் உயர்வுக்காக பல்வேறு வழிகளில் பணியாற்றிய உயர்திரு அழகப்பா... moreதமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றின் உயர்வுக்காக பல்வேறு வழிகளில் பணியாற்றிய உயர்திரு அழகப்பா ராம்மோகன் ஐயா அவர்களின் மறைவு தமிழ்கூறும் நல் உலகின் பேரிழப்பாகும். பல அருமையான புத்தகங்கள் வெளியிட்டது மட்டும் அன்றி, பல திருக்குறள்களை உரிய தமிழ்ப்பண்களில் இசைத்தட்டு மூலம் அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராம்மோகன் ஐயா அவர்கள் சிறந்த பண்பாளர்; இனியவர். அவருடைய நட்பு வட்டத்தில் இருந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகின்றேன்.
அன்னாரின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
Written by Nalankilli:
தமிழ்த் தொண்டர் அழகப்பா இராம்மோகன் மறைந்தார்
நான் 2000இல் ஸ்டீஃபன் ஆக்கிங் எழுதிய A Brief... moreWritten by Nalankilli:
தமிழ்த் தொண்டர் அழகப்பா இராம்மோகன் மறைந்தார்
நான் 2000இல் ஸ்டீஃபன் ஆக்கிங் எழுதிய A Brief History of Time நூலைத் தமிழில் காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்து முடித்திருந்தேன். அதை வெளியிட பதிப்பகம் கிடைக்கவில்லை. நான் உலகின் தமிழ்ப் பற்றுள்ள சில செல்வந்தவர்களுக்கு இந்தத் தமிழாக்கத்தை வெளியிட்டு உதவ கேட்டிருந்தேன். என்னை மின்ம அஞ்சலில் இராம்மோகன் தொடர்பு கொண்டார். பிறகு தொலைபேசியிலும் பேசினார். இந்த நூலைத் தமிழாக்கம் செய்வது என் நீண்ட நாள் கனவு என்றார். எனக்கும் இது நீண்ட நாள் கனவுதான் என்றேன். பாருங்கள் அதிசியம், உலகின் வெவ்வேறு இடங்களில் உள்ள நம்மை முருகன்தான் சேர்த்து வைத்திருக்கிறார் என்றார். எங்களின் அறிவியல் தமிழ் வேட்கை ஆத்திகரான அவரையும் நாத்திகனான என்னையும் சேர்த்து வைத்தது. அவரது உலகத் தமிழ் அறக்கட்டளை நூலை வெளியிட்டது.
அடுத்து ஒரு மூன்றாண்டு கழித்து ஆங்கிலத்தில் இரு தொகுதிகள் கொண்ட மிகப் பெரும் இயற்பியல் புத்தகத்தைக் கொண்டு வந்தார். இதனைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டார். நான் அரண்டு போனேன். ஐயா, இதைப் படித்து முடிப்பதே பெரும் பணி. நான் கொஞ்சம் சோம்பேறி வேறு. இதைப் போய் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்கிறீர்களே என்றேன். இல்லை, உங்களால் முடியும் என்றார். அது அமெரிக்காவின் கால்டெக் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல். புத்தகத்தின் பெயர் The Mechanical Universe. அந்தப் புத்தகத்துக்கு இயந்திர அண்டம் எனப் பெயரிட்டேன். மன உறுதியுடன் ஈராண்டு போராடி தமிழாக்கி முடித்தேன்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் எனப் பாடிய பாரதியின் கனவோடு வாழ்ந்த எங்களின் தமிழ் நட்பு மறக்க முடியாதது.
ராம்மோகன் திருக்குறள் உலகெங்கும் பரவ வேண்டும் என்ற பெரும் கனவுடன் வாழ்ந்தார். திருக்குறளை ஆங்கிலேயர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அந்த நூலை பைபிள் தாளில் அச்சடித்து அப்துல் கலாமை சென்னையில் வெளியிடச் செய்தார்.
தமிழ்த் தொண்டு செய்வதற்கென உலகத் தமிழ் அறக்கட்டளையை அமெரிக்காவில் சிகாகோவில் நடத்தி வந்தார்.
இத்தகைய அரும் பெரும் தமிழ்த் தொண்டர் இன்று காலை இந்திய நேரப்படி அமெரிக்காவில் சிகாகோவில் காலமானர். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறது.
எனக்குள் அறிவியல் தமிழுணர்வைத் தூண்டி விட முக்கியக் காரமாணமாக இருந்த, வாழ்நாள் முழுதும் தமிழ் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த அழகப்பா ராம்மோகன் அவர்களுக்குத் தமிழ் வணக்கங்கள்!
மலர் வணக்கம் - முனைவர் அழகப்பா இராம்மோகன்
- Written by So. Sankarapandi.
அமெரிக்காவில் தமிழ் மொழி ஆழ... moreமலர் வணக்கம் - முனைவர் அழகப்பா இராம்மோகன்
- Written by So. Sankarapandi.
அமெரிக்காவில் தமிழ் மொழி ஆழ விதைக்கப்பட்டதென்றால் அது சிகாகோ மண்ணில்தான்.
ஒருபுறம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்படவும், ஆராய்ச்சி செய்யவும் சிகாகோ பல்கலைக்கழகம் முன்னோடியாக அமைந்ததன் காரணம் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் ஏ.கே.இராமானுஜம் அவர்கள்.
மறுபுறம் அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் தமிழ்ச்சங்கங்கள் திரைப்படக் கேளிக்கைகளையும் தாண்டி தமிழ்ப்பண்பாட்டு வேர்களை நிலைநாட்டியதற்கு சிகாகோ தமிழ்ச்சங்கம் முன்னோடியாக அமைந்ததன் காரணம் குறிப்பிட்ட சில தமிழர்கள் (முனைவர் இராம் மோகன், திரு. விசுவநாதன், மருத்துவர் சோம இளங்கோவன், திரு. வா.செ.பாபு. போன்றோர்). அவர்களில் முனைவர் அழகப்பா இராம்மோகன் பதித்த முத்திரை உலக அளவில் அறியப்பட்டதும், பெருமைப்பட்டதுமாகும்.
அவர் நிறுவிய உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் அறிவார்ந்த பங்களிப்புகள் பல உண்டு. அவையனைத்துமே சிறப்பானவையென்றாலும், முதல் படைப்பான “தமிழ்ப்பண்பாட்டுக்கையேடு” (திருக்குறளை அடிப்படையாகக் கொண்டது) பெருமளவில் உலகத்தமிழர்களிடம் சென்று சேர்ந்ததெனலாம். உலகத்தமிழர் பலரும் பங்களித்த ஒரு நூலென்றும் சொல்லலாம்.
1993 ஆம் ஆண்டு விஸ்கான்சின் மாநிலத்தில் நடந்த பேரவை மாநாட்டில்தான் இராம்மோகன் அவர்களை முதன்முதலில் சந்தித்தேன். அதன்பின் நான் 1994ல் இந்தியா சென்று ஒன்றரையாண்டு இருந்துவிட்டு மீண்டும் அமெரிக்காவில் பால்டிமோர் நகருக்குத் திரும்பினேன். 1996ல் தமிழ்ப்பண்பாட்டுக் கையேட்டை கணினியில் அழகுற வடிவமைத்த முனைவர் பெரியண்ணன் குப்புசாமி அவர்களின் வீட்டில் சில வார இறுதிகளில் வந்து தங்கியிருந்தார். அப்பொழுது மெய்ப்புப் பார்ப்பதில் சிறு உதவிகளைச் செய்யும் பொருட்டு நானும் வார இறுதிகளில் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுது தமிழர் வரலாறு மற்றும் அரசியல் தொடர்பாக நிறைய நேரம் உரையாடியதுண்டு. அவருடைய தெளிவான குறிக்கோள்களும், அவற்றை நேர்த்தியுடன் செய்துமுடிக்க அவர் வைத்திருந்த திட்டங்களும் என்னை வியப்பிலாழ்த்தின. அவரிடம் கற்றுக்கொண்ட சில பாடங்கள் உண்டு. அதன்பின் பேரவை மாநாடுகளிலும், பிற தமிழ்-தமிழர் நிகழ்வுகளிலும் சந்தித்து உரையாடியதுண்டு. கடைசியாக இந்த ஆண்டு சிகாகோ மண்ணில் இரண்டு முறை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அப்படியிருந்தும் அவருடைய சொந்த ஊரில் தமிழ்ப் பண்பாட்டு நூலகம் ஒன்றை ஏற்படுத்துவதில் மிகத்தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இந்த மாதம் இறுதியில் (டிசம்பர் 28) அந்த நூலகத்திறப்பு விழா இருந்தது.
வாழ்நாள் முழுவதும் எந்தச் சச்சரவுகளிலும் சிக்காமல் நிறைவான பங்களிப்புச் செய்தவர்.
அமெரிக்கத் தமிழ் இளைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தாரென்று சொல்லலாம்!
இராம்மோகன் ஐயா அவர்களுக்கு என் மலர்வணக்கம்! குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!!
Written by Siva Mayiladuthurai:
அமெரிக்காவின் முக்கிய தமிழ் அறிஞர் முனைவர் அழகப்பா ராம் மோகன்... moreWritten by Siva Mayiladuthurai:
அமெரிக்காவின் முக்கிய தமிழ் அறிஞர் முனைவர் அழகப்பா ராம் மோகன் மறைந்தார்.
அமெரிக்கா_தமிழர் வரலாற்றில் முனைவர் அழகப்பா ராம் மோகனுக்கு மிகப் பெரும் இடம் இருக்கிறது.
சிகாகோவில் கிட்டதட்ட 50 ஆண்டுகள் வசித்தும், தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுப்பட்டு வந்தார்.
“உலகத் தமிழ்மொழி அறகட்டளை” மூலம் “தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு - தமிழன எதிர்கால வழிகாட்டி” என்ற திருக்குறள் புத்தகத்தை உலகத் தரத்தோடு வெளியிட்டவர்.
இந்த தமிழன கையேட்டை வெளியிட உலகம் முழுக்க இருக்கும் தமிழ் ஆர்வலர்களோடு சேர்ந்து பணி ஆற்றியவர்.
இந்த புத்தகம் வெளிவந்த ஆண்டு 2000, மொத்தம் பிரதிகள் 10,000 - தமிழ் வரலாற்றில் வெளிநாட்டில் வெளியிட்ட தமிழ் இலக்கிய புத்தகம் இத்தனை பிரதிகள் விற்று தீர்ந்த விட்டது என்பது ஒரு மாபெரும் சாதனை.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் “நினைக்கப் பட வேண்டியவர்கள்” என்ற மற்றோரு புத்தகத்தையும் தயாரித்து வெளியிட்டவர்.
இந்த புத்தகம் நம் தமிழுக்கும், நம் தமிழ் சமுதாயத்திற்கு பாடுப்பட்ட பல்வேறு கலைஞர்களை போற்றும் புத்தகம்.
அகிலன், அறிஞர் அண்ணா, அண்ணாமலை செட்டியார், அழகப்பர் வள்ளல், பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், பாவேந்தர், பாரதி, கலைவாணர், காயிதே மில்லத், ஜீவா, புதுமை பித்தன் என இந்த பட்டியில் மிக நீளம்!
சிகாகோ தமிழ்ச் சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, உலகத் தமிழ் அமைப்பு, பன்னாட்டு பெரியார் அமைப்பு என்ற பல அமைப்புகளில் தொடர்ந்து பணி ஆற்றியவர்.
அமெரிக்காவில் இரண்டு திருமணங்களில் திருக்குறள் முறைப்படி திருமணங்களை நடத்தியவர்.
கனடாவில் இவரது தமிழன கையேடு மூலம் கனடா_தமிழ்_நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்றுக் கொண்டார்.
கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அப்படியிருந்தும் அவருடைய சொந்த ஊரில் தமிழ் பண்பாட்டு நூலகம் ஒன்றை ஏற்படுத்துவதில் மீகத்தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இந்த மாதம் இறுதியில் (டிசம்பர் 28) அந்த நூலகத்திறப்பு விழா இருந்தது.
இவரது தமிழ் படைப்புகளை “அன்று தொட்டு இன்றுவரை உலகு எங்கும் தமிழ் இனத்தின் மானம் காக்க உயிர்க் கொடை ஈந்த மாவீரர்களுக்கும், சிறை சென்றும் செக்கிழுத்தும் தங்களையே அர்பணித்த உத்தமர்களுக்கும் இப்படைப்பு ஒரு காணிக்கை” - என்று குறிப்பிட்டு இருக்கிறார், இது அவருக்கும் பொறுந்தும்.
அழகப்பா ராம் மோகன் மறைந்து விட்டார். அவரது திருக்குறள் நூல் வெளியீட்டின்போது... moreஅழகப்பா ராம் மோகன் மறைந்து விட்டார். அவரது திருக்குறள் நூல் வெளியீட்டின்போது தொகுப்பாசிரியர்களில் ஒருவராகத் துணைபுரிந்தபோதுதான் அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கினேன். திருக்குறள் நூலை அச்சடிக்க வேண்டிய கெடு சில நாட்களே இருந்த நிலையில் பல கட்டுரைகளுக்குச் சுருக்கவுரையை எழுத வேண்டியிருந்த போது அந்த வேலையை அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன். அந்தச் சுருக்கவுரைகளை எழுதி முடிக்கும் வரை ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்கள் என்னோடு தொலைபேசியில் உரையாடி அவற்றை மெருகேற்றினார். கெடுவுக்குள் வேலையை நாங்கள் முடித்த பிறகு பல ஆண்டுகளாக ஒவ்வொருமுறை நாங்கள் சந்தித்த போதும் என்னுடைய மிகச்சிறு பங்களிப்பை வெகுவாகப் பாராட்டிப் பேசி நன்றி தெரிவித்த தலைமைப் பண்பு அவருடையது. அவரைப் போன்ற தெளிவான சிந்தனையும், கொள்கை உறுதியும், நெஞ்சுரமும், தொலைநோக்கும், ஆழ்ந்த தமிழ்ப்பற்றும், செயல்திறனும், பேச்சுவலிமையும் கொண்டவர்கள் வெகு அரிது. அவரோடு பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் அவருடைய நற்பண்புகளை அறிவார்கள்.
2003 பேரவை மாநாட்டில் அன்றைய இந்திய அதிபர் அப்துல் கலாம் அவர்களை நேரலை பங்கேற்பு முயற்சியில் அவர் எவ்வளவு ஈடுபட்டார் என்று நினைவிருக்கிறது. பலரை நெகிழ வைத்த தருணங்கள் அவை.
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சென்று பார்த்த மறுநாளே அவர் மருத்துவத்துக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என்பதைப் பின்புதான் அறிந்தேன். அவ்வளவு நோவிலும் நெடுநேரம் எங்களோடு அவருடைய கனவுகள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். திருக்குறள் தமிழர்களுடைய ஆணிவேர் என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை. அமெரிக்கா வந்த பிறகும் நண்பர் குமார் குமரப்பன் வீட்டில் ஒருமுறை அவரைப் பார்க்க முடிந்தது. நலமாகி வருவது போலத்தான் நம்பிக்கையுடன் இருந்தோம்.
பணி ஓய்வு பெற்ற பிறகும் அவர் பட்ட மேற்படிப்புக்குப் பதிவு செய்து இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றது அவரது உழைப்புக்குச் சான்று. இயற்பியலைப் பள்ளிக்குழந்தைகளுக்கும் உயர்ந்த தரத்தில் கற்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் அமெரிக்கத் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட தொடரைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார் ராம்மோகன். (பார்க்க: https://kural.org/physics/ )
எதைச் செய்தாலும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்று ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட்டவர் ராம்மோகன் அவர்கள். அவரது மறைவு அமெரிக்கத் தமிழர்களுக்குப் பேரிழப்பு. அவரது சுற்றத்தார், உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். less
Dr. Algappa Rammohan was in on-going dialogue with numerous researchers, scholars, patrons of Tamil and educational institutions, worldwide. I believe that his vision, reach, contributions, and influence has no parallel in the modern-day Tamil... moreDr. Algappa Rammohan was in on-going dialogue with numerous researchers, scholars, patrons of Tamil and educational institutions, worldwide. I believe that his vision, reach, contributions, and influence has no parallel in the modern-day Tamil diaspora. His positioning of Thirukkural as the 'bible' of Tamil identity and culture and the publication of Thirukkural Handbook will inspire and unite the Tamils everywhere.
Dr. Rammohan and his wife's visited AGN School campus, located in Konganapuram village, Salem District, Tamil Nadu, India, and had several interactions with the students and staff. They charmed the students with gifts of books, hand-picked from the Erode Book festival. Dr. Rammohan had set to music the 108 verses of 'Thirukkural Manthiram' authored by Pulavar Ilangkumaranar. Thirukkural Manthiram is recited by AGN and APPU students every day in their morning assembly. A recent study done on the effect of reciting Thirukkral Manthiram regularly has revealed a large-scale life-changing positive impact on the behavior of school children.
Aahanal Thamizh Mandram (ஆகநல் தமிழ் மன்றம்) honored Dr. Rammohan with the Thiukkural Kaavalar (திருக்குறள் காவலர்) award in 2016 (Please see the Photos tab).
His virtual presence will be with us forever. less
முனைவர் அழகப்பா இராம்மோகன் ஐயா அவர்களின் மறைவிற்கு. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆழ்ந்த... moreமுனைவர் அழகப்பா இராம்மோகன் ஐயா அவர்களின் மறைவிற்கு. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.தமிழர் பண்பாட்டு கையேடு நூலினை உலகிற்கு தந்த பெருந்தகை. www.kural.org என்ற இணையதளத்தின் வழியே தமிழர்களுக்குத் தொண்டாற்றிய தமிழ்த்தொண்டர். 2003ஆம் ஆண்டு பேரவை விழாவில் முனைவர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சினை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்ததில் முக்கியப் பங்காற்றியவர். அறிவியல் கல்வியை தமிழ் நாட்டு மாணவச் சமுதாயத்தின் நலனுக்காக தமிழில் மொழி பெயர்த்து பள்ளிகளுக்கு வழங்கி ஊக்குவித்த உத்தமர். இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவர் வெளியிட்ட தமிழ் பண்பாட்டு கையேடு அடுத்த தலைமுறைக்கும், நமக்கும் தமிழரின் பண்பாடு, அறிவியல், தொன்மை, கலை மற்றும் அனைத்து பங்களிப்பையும் தெளிவாக ஆங்கிலத்திலும், தமிழிலும் விளக்கியுள்ளது. Annenberg Foundation பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித தத்துவத்தை எளிமையாக புரிந்து கொள்ள மாபெரும் அறிவியற் அறிஞர்கள் மூலம் ஒரு காணொளி திட்டத்தை தயாரித்தது. அந்த உலகப்புகழ் பெற்ற காணொளிகளை தமிழில் மொழி மாற்றம் செய்ய உரிமை வாங்கி , அவற்றை தமிழில் மொழி மாற்றி , தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொடுத்தவர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் less
புலம்பெயர்ந்த தமிழர்களில் ஓர் அணையா விளக்கு. அண்ணாரின் தமிழ்ப்பணியும், தமிழர்களின் வாழ்வியல் நெறியான திருக்குறளுக்கு நவீன முழுவடிவம் தந்த நற்பணியும் என்றும் நம் மனதில் மறையாது. அண்ணாரின் புகழ் வாழ்க. -நா.க.நிதி (உலகத்தொல்காப்பிய மன்றம்).
ஆழ்ந்த இரங்கல்கள். செயற்கரிய செய்து வாழ்வாங்கு வாழ்ந்த பெருந்தகை.
தக்கார் தகவிலர் என்பது... moreஆழ்ந்த இரங்கல்கள். செயற்கரிய செய்து வாழ்வாங்கு வாழ்ந்த பெருந்தகை.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
என்ற குறளின் படி, தக்காராக வாழ்ந்த பெருந்தகை. பேரிழப்பு. உங்கள் வாழ்க்கை எங்களுக்கு ஒரு வழிகாட்டி.
பெரும் வருத்தத்துடன் பகிர்கிறேன்..
The passion, hard work and the dedication that Dr. Alagappa Rammohan showed in taking Science in Tamil and Tamil to next generation will be a guiding light for us and we will pass on his light through us to the next generation as well. less
திரு அழகப்ப இராம்மோகன் அவர்களின் மறைவுக்கு எம் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும்... moreதிரு அழகப்ப இராம்மோகன் அவர்களின் மறைவுக்கு எம் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
திரு அழகப்ப இராம்மோகன் அமெரிக்காவிலே தமிழ்தொடர்பான அறக்கட்டளையை 1990களீலேயே முன்னோடியாக நிறுவிப் பெரிய அளவிலே தமிழின் அகன்ற பன்முகக் கூறுபாடுகளை வளர்க்கும்படிக்குப் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முடித்தவர். மேலும் அமெரிக்காவிலிருந்துகொண்டு நவீன காலத்திலேயும் தமிழின் தொடர்பையும் தொடர்ச்சியையும் நிகழ்த்திக்காட்டியவர்; அவ்வாறு செயலாற்றித் தமிழர்களின் மனப்பாங்கையும் மாற்றிக் காட்டியுள்ளார். வெறுமனே தமிழ்ப்பற்றுமட்டும் கொண்டிராமல் தாம் ஒருவரே முன்னின்று பல பயனுள்ள படைப்புக்களை வெளிக்கொணரும் கடினமான திட்டப்பணிகளை எடுது முடித்து தம் அரிய செயலாற்றலைப் புலப்படுத்தியவர். அவருடைய அந்தச் செயலாற்றலின் புலப்பாட்டிலே பொதுத்தொடர்புத் திறன், நிதிதிரட்டற் றிறன், மேலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், காப்புரிமையாளர்கள், பதிப்பாளர்கள், அரசியலாளிகள் என்று பலவேறு வகையான மாந்தர்களையும் அமெரிக்கா, அயிரோப்பா, தமிழகம், ஈழம், சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, மோரிசியசு என்று வையகப் பரப்பு முழுதும் பரவி வாழும் தமிழர்களின் பல்வேறு தமிழ்மன்றங்கள் அமைப்புக்கள் ஆகிய நிறுவனங்களோடு உறவாடித் தம் தமிழ்த்திட்டங்களுக்கு அவற்றை இணக்கி உறவாளுந் திறன் என்று அடுக்கிக்கொண்டே போகக்கூடிய அருந்திறன்கள் அத்தனையும் அடக்கம்.
அவருடைய வினைத்திட்பம் வெள்ளிடைமலையாக ஓங்கிநின்று நம் எல்லார்க்கும் வழிகாட்டும். அதன்படி நாமும் தமிழ் தமிழர் தொடர்பான திட்டப்பணிகளை நினைத்து முடிக்கும் பண்பைப் பெருக்கிக்கொள்வோமாக. அதுவே அந்தப் பெரியார்க்கு அளிக்கும் சீரிய காணிக்கையாகும்.
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணன் போலும் பொலிவான நெடிய பூதவுடம்பினாலே நீலமணித் தோற்றங்கொண்ட அவர் புகழுடம்பு அந்த மணிவண்ணன் போலவும் அவனைப் பாடிய பெரியாழ்வாரின் செந்தமிழ்போலவும் பலகோடி நூறாயிரமாண்டு மட்டுமன்றி என்றென்றும் நிலைத்து வாழ்க என்று கைகூப்பி வேண்டி அவர்தம் குடும்பத்தார்க்கும் உறவினர்க்கும் எம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.